திருப்பூரில் திமுக-மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அடிதடி
திருப்பூர்:
திருப்பூர் அருகே வாக்காளர்கள் சிலரை வாக்களிக்க அனுமதிப்பது தொடர்பாக திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
திருப்பூர் அருகேயுள்ள வேலம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தொண்டர்கள் சிலரை அழைத்து வந்து வாக்களிக்க வைக்க முயன்றனர். ஆனால்,அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல.
முன்பு இந்த டவுன் பஞ்சாயத்தில் இவர்கள் வசித்து வந்ததாகவும், இப்போது கேரளாவில்வசித்து வருவதாகவும் கூறினர்.
ஆனால், இவர்கள் தற்போது இங்கு வசிக்காததால் அவர்களை வாக்களிக்கஅனுமதிக்கக்கூடாது என்று திமுகவினர் கூறினர். இதையடுத்து திமுகவினருக்கும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இரு கட்சித் தொண்டர்களையும்சமாதானப்படுத்தினர்.
இதனால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.
இந் நிலையில் திருப்பூரின் வடக்கு பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற 3 இளைஞர்களைபோலீசார் கைது செய்துள்ளனர்.