மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு சிதம்பரம் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்க காங்கிரஸ் அணியுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் மற்றும் மதிமுகதலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
உள்ளாட்சித் தர்தலில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட அணிகெளரவமான வெற்றியைப் பெற்றுள்ளது.
எங்களைப் பொறுத்தவரையில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்பதை பலஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது அதை மேலும் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாகக் குரல்கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகபோன்ற கட்சிகள் முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications