திருட்டோடு கற்பழிப்பு... பிடிபட்டான் பலே திருடன்
சென்னை:
வீடுகளில் அதிகாலையில் திருடப் போகும்போது போனஸாக வீட்டிலிருக்கும் இளம் பெண்களை கற்பழிக்கும்திருடனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ளது புளியந்தோப்பு பகுதி. இந்தப் பகுதியில் அடிக்கடி அதிகாலையில் திருட்டு நடப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாகபுகார் வந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். அப்போது சுரேஷ் என்பவர் பிடிபட்டார். அவரிடம்போலீஸார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சுரேஷ் அதிகாலை வேளையில் புளியந்தோப்பு பகுதியில் திருடுவது வழக்கமாம். திருடும்போது அந்த வீடுகளில்யாராவது இளம் பெண்கள் இருந்தால் அவர்களைக் கத்தியைக் காட்டி கற்பழித்து விடுவாராம்.
இதுபோல பல பெண்களை அவர் கற்பழித்துள்ளாராம். ஆனால் மானத்திற்குப் பயந்து யாரும் போலீஸில்சொல்லாமல் இருந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து சுரேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது சய்யப்பட்டு அவரை ஒரு வருடத்திற்கு போலீஸார்சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ. 70,000 மதிப்புள்ள திருட்டுப் பொருட்களும் மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications