இந்தியா வந்தார் ஜெர்மன் அதிபர்
டெல்லி:
மூன்று நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் ஜெர்ஹார்டு ஷ்ரேடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்தியா வந்துசேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது நடந்து வரும் அமெரிக்க தாக்குதல்கள் குறித்தே பெரும்பாலும் இந்தியாவும்ஜெர்மனியும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான சில ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
ராஜஸ்தானில் தொடங்கப்படவுள்ள சோலார் பவர் புராஜக்ட் உள்பட ரூ.700 கோடி ரூபாய் மதிப்புள்ளதிட்டங்களுக்கான ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்காவிற்குத் தன்னுடையஆதரவைத் தொடர்ந்து அளித்து வருகிறது ஜெர்மனி.
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமெரிக்க தாக்குதலை ஜெர்மனி ஆதரித்து வந்த போதிலும்,ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் தலையீடுகள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் மூலமாகவேஆப்கானிஸ்தானின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஜெர்மன் வலியுறுத்தி வருகிறது.