மதானியை விடுதலை செய்யக் கோரி பாலக்காட்டில் போராட்டம்
பாலக்காடு:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயகமுன்னணி கட்சியின் தலைவர் மதானியை விடுதலை செய்யக் கோரி பாலக்காட்டில்அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மதானியை விடுதலை செய்யக்கோரி தமிழக, கேரள எல்லைப் பகுதியான வாலையாறில் சாலை மறியல் போராட்டம்நடத்தப்படும் என்று இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால் இப்போராட்டத்திற்குத் தமிழக போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்துபோராட்டத்தை பாலக்காட்டில் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியகட்சிப் பிரமுகர்கள், உடனடியாக மதானியை விடுதலை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் தமிழகத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடஅனுமதிக்க மாட்டோம். அதைத் தடுப்போம் என்று மிரட்டல் விடுத்தனர்.
சாலை மறியல் போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல்தடுக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாலக்காட்டிலிருந்து தமிழகம் நோக்கிச் செல்லும் பஸ்கள் போராட்டப்பாதையிலிருந்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.












Click it and Unblock the Notifications