அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம் இல்லை
சென்னை:
கடை நிலை ஊழியர்கள் தவிர வேறு எந்த அரசு ஊழியருக்கும் இந்த ஆண்டு தீபாவளி முன் பணம் கிடையாதுஎன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பண்டிகை முன்பணம் வழங்குவதில் புதிய சிக்கல்ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசிடம் நிதிப் பற்றாக்குறை நிலவிவருவதால், முன்பணம் வழங்கப் படுவதே சந்தேகமாக இருந்து வந்தது.இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) தமிழக அரசின் நிதித்துறை தனிச் செயலாளர் அருள்மொழி ஒரு அறிக்கைவெளியிட்டார்.
அதில் தமிழக அரசு ஊழியர்களில் குரூப் டி ஊழியர்கள், அதாவது அலுவலக ஊழியர்கள் மற்றும் அதற்குக் கீழ்பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் தீபாவளிக்காக பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
இதனால் இந்த குரூப்-டி ஊழியர்கள் தவிர 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே அரசு ஊழியர்கள் பண்டிகை முன்பணம் கேட்டு விண்ணப்பித்து,ஒரு வாரத்திற்குள் அதற்கான தொகையைப் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications