பெரியாறு அணை வழக்கு- மத்திய, கேரள அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்
டெல்லி:
முல்லை பெரியாறு அணையின் உயரத்ைதை உயர்த்துவது குறித்த வழக்கில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும்தங்கள் நிலையை விளக்க சுப்ரீம் கோர்ட் 5 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழக எல்லைக்கு அருகில் உள்ள பெரியாறு அணையின் உயரம் தற்போது 130 அடியாக உள்ளது. அதன்உயரத்தை 150 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரி வந்தது. ஆனால் அதற்கு கேரள அரசுசம்மதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நிபுணர் குழு ஒன்றை அமைத்து அணையின் உயரத்தை உயர்த்தலாமா என்றுஆரரய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதன் படி ஆராய்ந்த நிபுணர் குழு தனது அறிக்கையில்,படிப்படியாக அணையின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று கூறியது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.எஸ். எம்.குவாத்ரி, எஸ்.என்.புகான் ஆகியோரைக் கொண்ட டிவிஷன்பெஞ்"சு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், கேரள அரசும் தமதுநிலையை விளக்கிக் கூற 5 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.