டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 16 குழந்தைகள் பலி
சென்னை:
சென்னை நகரில் டெங்குக் காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 350 குழந்தைகள் வரை டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொசுக்களால் பரவும் டெங்குக் காய்ச்சல் தற்போது சென்னை நகரில் பீதியைக் கிளப்பி வருகிறது. சென்னை நகரில்கடந்த பல நாட்களாக கன மழை பெய்து வந்ததால் நகர் முழுவதும் மழை நீர் இன்னும் குளம் போலதேங்கியுள்ளது. மேலும் சாக்கடைகளும் ஆங்காங்கே தேங்கியுள்ளன.
இதனால் நகரில் கொசுக்களின் உற்பத்தி பல்கி பெருகி விட்டதையடுத்து கொசுக்களால் உண்டாகும் டெங்குக்காய்ச்சல் தற்போது குழந்தைகள் மத்தியில் வெகு வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 16 குழந்தைகள் டெங்குக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளன. 350க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகல் நேரங்களிலும் கூட கொசுக்கள் கடிப்பதால் சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications