படிப்பு: பிளஸ்- -1, தொழில்: டாக்டர்
சென்னை:
சென்னையில் மீண்டும் ஒரு போலி டாக்டர் பிடிபட்டுள்ளார். இவரது கல்வித் தகுதி பிளஸ் 1 என்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு வதவதவென போலி டாக்டர்கள் பிடிபட்டனர். ஒரு போலி டாக்டரைக்கைது செய்தால் அவர் மூலம் பல போலி டாக்டர்கள் குறித்த தகவல் வெளியாகி போலீஸாரைவியப்புக்குள்ளாக்கியது.
இவையெல்லாம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் ஒரு போலி டாக்டர் பிடிபட்டுள்ளார்.
தண்டையார் பேட்டை பகுதியில் வெங்கடேஸ்வரலு என்ற ஆந்திர இளைஞர் கிளினிக் நடத்தி வந்தார். அவரதுவயதும், அவரது வைத்திய முறைகளும் அப்பகுதி மக்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பின. இதுகுறித்து போலீஸில்தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் வெங்கடேஸ்வரலுவை விசாரித்தனர். அப்போது அவர் போலி டாக்டர் எனத் தெரியவந்தது. அவர் பிளஸ் 1 வரை மட்டுமே படித்துள்ளார்.
டாக்டராக ஆக்ட் கொடுத்த அவர் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications