தமிழகத்தில் தொடர்ந்து கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலிருந்தே பலத்தமழை பெய்து கொண்டிருக்கிறது.
உயர்ந்த அளவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 26.5 செ.மீ. அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது.
சென்னைக்குக் குடிநீர் அளித்துக் கொண்டிருக்கும் ஏரிப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால், ஏரிகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த மழையால் பெரிதும் மகிழ்ந்துபோயிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications