ஹோட்டல் வழக்கு: ஜெயாவை விசாரிக்க நீதிமன்றம் தடை
சென்னை:
லண்டனில் ஜெயலலிதா ஹோட்டல் வாங்கியதில் -நடந்த -முறைகேடு தொடர்பாக செஷன்ஸ் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளவழக்கை விசா-ரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
லண்டனில் 2 ஹோட்டல்களை ஜெயலலிதா வாங்கியதில் ரூ. 43 கோடி அளவுக்கு ஜெயலலிதாவும், தினகரனும் மோசடி செய்ததாகலஞ்ச ஒழிப்புப் போலீஸார் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பாக குற்றப்பத்தி-ரிக்கைதாக்கல் செய்யப்பட்டு விசாரணை -நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு 3 -முறை நீதிபதி அசோக்குமார் ஜெயலலிதாவுக்கும், தினகரனுக்கும் சம்மன் அனுப்பினார். ஆனால்அவர்கள் ஆஜராகவில்லை.
இந்த -நிலையில், செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்குத் தொடரப்பட்ட-து ச-ரியல்ல, இதை தடை செய்ய வேண்டும், மேலும்கோர்ட்டில் -ந-ரில் ஆஜாரவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோ-ரி ஜெயலலிதா தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு -தாக்-கல் செய்யப்பட்டது. தினகரனும் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.டி.தினகரன் விசா-ரித்தார். விசாரணைக்குப் பின் செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கை -நவம்பர் 8ம் தேதிவரை விசா-ரிக்க இடைக்காலத் தடை விதித்தார். மேலும், ஜெயலலிதாவும், தினகரனும் கோர்ட்டில் -ந-ரில் ஆஜராகத்தேவையில்லை என்று அவர்களுக் விலக்கு அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு -நாட்டீஸ் அனுப்பவும் நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications