தாதா வீரமணியை போலீஸ் தேடுகிறதாம்!
சென்னை:
சென்னை தாதா அயோத்தி குப்பம் வீரமணியைத் தேடி சென்னை போலீஸார் விஜயவாடாவுக்குப் பயணம்மேற்கொண்டுள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன் திமுக பேரணியில் அதிமுகவினருடன் சேர்ந்து பெரும் வன்முறையைக் கிளப்பியவர்வீரமணி. பல திமுகவினரை போலீஸ் முன்னிலையில் அவரது ஆட்கள் வெட்டிச் சாய்த்தனர். இவருக்கும் ஒருஅதிமுக அமைச்சருக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் திமுக புகார் கூறியது.
இந் நிலையில் கடந்த வாரம் வீரமணியின் ஆட்கள் பட்டப்பகலில் சென்னை நீதிமன்றத்தில் புகுந்து ஒரு எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ரவுடி சண்முகத்தை கடத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து வீரமணியை போலீஸார் தேடி வருகின்றனர். போலீசுக்குத் தெரியாமல் அவர்தலைமறைவாகிவிட்டாராம்!.
வீரமணியைத் தேடி ஒரு தனிப் போலீஸ் படை விஜயவாடாவுக்கு விரைந்துள்ளது.
இந் நிலையில் லாஞ்சர் படகு மூலம் கடலுக்குள் வீரமணி தலைமறைவாகி இருக்கலாம் என்றும் ஆந்திர கடலோரநகரங்களில் ஏதாவது ஒன்றுக்கு அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications