ஆப்கானில் நுழைந்த முன்னாள் அமைச்சர் கதி என்ன?
காபூல்:
தலிபான்களுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆப்கானிஸ்தானுக்குள் ரகசியமாய்நுழைந்துள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரை தலிபான்கள் தேடி வருகின்றனர்.
முன்னாள் ஆப்கானிஸ்தான் மன்னர் ஷகீர் ஷாவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகஇருந்தவர் ஹமீத் கர்ஸாய்.
சில தினங்களுக்கு முன் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஆப்கானிஸ்தானின் உர்ஸ்கான் மாகாணத்துக்குள்கர்ஸாய் தனது பாதுகாவர்கள், ஆதரவாளர்களுடன் ரகசியமாய் நுழைந்தார். இவர்கள் நுழைந்ததைத் தெரிந்துகொண்ட தலிபான்கள் இவர்களைத் தேடி ஆரம்பித்துள்ளனர்.
கர்ஸாயுடன் சென்றவர்களில் 12 பேர் தலிபான்களிடம் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இவர்களை தூக்கில்போடப் போவதாக தலிபான்கள் மிரட்டி வருகின்றனர்.
ஆனால், கர்ஸாயும் அவரது பாதுகாவலர்களும் தலிபான்களிடம் இருந்து தப்பி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம்சென்று கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கா வழங்கிய சாட்டிலைட் போன் மூலம் அமெரிக்க ராணுவத்துடன்தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டுள்ளனர்.
இதனால், இவர்கள் இருக்கும் இடம் அமெரிக்காவுக்கு மட்டுமே தெரியும். தலிபான் வீரர்களிடமிருந்துஇவர்களுக்கு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை கர்ஸாயை தலிபான்கள் சுற்றி வளைத்தனர். உடனடியாக விரைந்து வந்த அமெரிக்கஹெலிகாப்டர்கள் தலிபான் வீரர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தின. இதில் 4 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.கர்ஸாய் தனது பாதுகாவலர்களுடன் அந்த இடத்திலிருந்து தப்பிவிட்டார்.
அவரை தலிபான்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்கா பேச்சைக் கேட்டு ஆப்கானிஸ்தானுக்குள் ரகசியமாய் நுழைந்த நார்த்தர்ன்அலையன்ஸ் படையினரின் கமாண்டர் அப்துல் ஹக், தலிபான்களிடம் சிக்கி தூக்கில் போடப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications