எண்ணெய் சட்டியில் விழுந்த 3 வயது சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தீபாவளி தினத்தன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தபோது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்த 3 வயதுசிறுவன் உயிரிழந்தான்.
கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் ஆறு-முகம். கூலித் தொழிலாளியான இவரது மகன் சசி. தீபாவளி தினத்தன்று ஆறுமுகத்தின்மனைவி அமுதா வீட்டில் பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது சசி வீட்டுக்கு வெளியே -விளையாடிக் கொண்டிருந்தான்.
அ-முதா எண்ணெய் சட்டியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் ஓடி வந்த சசிசட்டியைக் கவனிக்காமல் கால் தடுமாறி அதில் விழுந்தான். இதில் உடல் வெந்த நிலையில் சசி உயிருக்குப் போராடினான்.
உடனடியாக அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்வெள்ளிக்கிழமை காலை சசி இறந்தான்.












Click it and Unblock the Notifications