தலிபான்களின் சரணடையும் முயற்சிக்கு உதவ ஐ.நா. மறுப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

குண்டூஸ் நகரில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான் வீரர்கள் தாங்கள்சரணடையத் தயாராக இருப்பதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது.

குண்டூஸ் நகரில் 20,000 பேர் கொண்ட தலிபான் படையை நார்த்தர்ன் அலையன்ஸ் சுற்றி வளைத்துள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் மற்றும் அரேபியர்கள்.

இவர்கள் சரணடையத் தயாராக இருப்பதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் எனவும்தலிபான்களின் சார்பில் ஒரு முக்கியத் தூதர் ஐ.நா. அதிகாரிகளைச் சந்தித்தார்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த யாரும் இல்லை. இதனால், உங்களுக்கு உதவிசெய்ய முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர்.

குண்டூஸ் நகரில் சிக்கியுள்ள தலிபான்களை சரணடையுமாறு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் எச்சரித்தும்அவர்கள கேட்கவில்லை. இதனால் அவர்களைக் கொன்று குவிக்க நார்த்தர்ன் அலையன் தயாராகி வருகிறது.

ஏற்கனவே, தங்களிடம் சிக்கிய பல நூற்றுக்கணக்கான தலிபான் வீரர்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்கொன்று வருவதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதை அந்தப் படை மறுத்துள்ளது. தலிபான்களை சிறைபிடித்து மட்டுமே வருவதாகக் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+