For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இந்திரா பிறந்த நாள் விழா
சென்னை:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் இன்று (திங்கள்கிழமை)பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்திரா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னை வால் டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தகாங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதே போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜி.கே. வாசன் தலைமையிலான தலைவர்கள் இந்திராகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைச் சேர்ந்த தலைவர்களும் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தி,உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Comments
Story first published: Monday, November 19, 2001, 5:30 [IST]