For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்த்தை முறியடிக்க களத்தில் இறங்கினார் வளர்மதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பஸ் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தம் தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னையில் பல இடங்களில் ரெளடிகள் துணையுடன் கள்ள ஓட்டுகள், வாக்குப்பெட்டிகளை சேதப்படுத்துதல் என அடாவடியாக நடந்து அனைவரையும் கலங்கடித்தார் வளர்மதி. அமைச்சரே காரில் முன்னால்வர ரெளடிகள் பின்னால் வந்து வன்முறைத் தாண்டவமாடினர்.

இந் நிலையில் சென்னையில் பந்த்தை முறியடிக்கும் பொறுப்பை வளர்மதியிடம் ஜெயலலிதா கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

பந்த்தை முறியடிக்க அதிகாரப்பூர்வமாகவும் பிற வழிளிலும் என்னென்ன நடவடிக்கை எடுப்பது எனபது குறித்து அவர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறைஅதிகாரிகள், கலெக்டர் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தை முறியடித்து, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத சூழ்நிலையைஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பஸ்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால்தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கவும் உத்தரவிடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X