கிரிக்கெட் விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு
இஸ்லாமாபாத்:
இந்திய வீரர்களுக்கு ரெப்ரீ அளித்த தண்டனையை எதிர்த்து இந்தியக் கிரிக்கெட் போர்டு எடுத்துள்ள முடிவைஆதரிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டித் தொடரில் விதிமுறைகளை மீறியதாகஇந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் உட்பட 6 பேருக்கு ரெப்ரீ மைக் டென்னஸ் தண்டனை கொடுத்துள்ளார்.
டென்னஸை போட்டித் தொடரிலிருந்து நீக்க வேண்டும் என்றும், வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் இந்தியக் கிரிக்கெட் போர்டு கூறிவருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டைப்பொறுத்த வரை இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம்.
ஆனால் ஐ.சி.சியால் ரெப்ரீயாக நியமிக்கப்பட்டவரை நீக்கிவிட்டு, இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும்தன்னிச்சையாக விளையாட முடிவெடுத்திருப்பது கவலைக்குரியது. இது மேலும் பிரச்சனையை உருவாக்கும் என்றுநாங்கள் கருதுகிறோம்.
மேலும் இந்தியா தற்போது தனது நிலையில் உறுதியாக இருப்பதைப் போல பாகிஸ்தானில் விளையாடவரும்போதும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications