ஹிமாச்சல் பிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்கி 3 வீரர்கள் பலி
ஜம்மூ:
பஞ்சாப்-ஹிமாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தீவிரவாதிகள்திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பதான்கோட் அருகே மலை உச்சியில் இருந்து இந்த வாகனங்களை நோக்கி ராக்கெட்களை வீசி தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். உடனடியாக ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர்.
மலை முகடுகளில் ஒழிந்து கொண்டு தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் பலியாயினர்.மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தினரின் மீது நடந்துள்ள முதல் தாக்குதல் இது தான. இதுவரை ஜம்மூ-காஷ்மீரில்நடந்து வந்த தீவிரவாதம் முதல்முறையாக ஹிமாச்சல பிரதேசத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் கூடுதல் ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்துவிட்டனர். ஆனால்,அந்தத் தீவிரவாதிகள் அதற்குள் தப்பியோடிவிட்டனர்.
இவர்களைப் பிடிக்க ஹிமாச்சலப் பிரதேசத்திலும், பஞ்சாபிலும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications