நேபாளத்தில் வாஜ்பாய்
காட்மாண்டு:
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய் நேபாள தலைநகர் காட்மாண்டு போய்ச் சேர்ந்தார்.
சர்வதேச பயங்கரவாதத்துக்கு மூல காரணமாக பாகிஸ்தான் உள்ளது என்றும் பயங்கரவாதத்தை அடியோடுஒழித்துக் கட்டுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் வாஜ்பாய் நேபாளம் கிளம்புவதற்கு முன் லக்னோவில்தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் பேசும் திட்டமேஇல்லை என்றும் வாஜ்பாய் ஏற்கனவே தான் கூறிவந்த கருத்தை இப்போதும் உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து காட்மாண்டு கிளம்பினார்முஷாரப்.
இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, முஷாரப் சீனாவழியாக காட்மாண்டுக்குப் பயணம் செய்ய நேர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் முஷாரப் 2வது முறையாக சீனாவுக்குச் சென்றுள்ளார். சீனப் பிரதமர் ஜூ ரோங்ஜியுடன்ஒரு மணி நேரம் பேசிய பிறகு அவர் காட்மாண்டு கிளம்பினார்.
பாகிஸ்தான் விமான பைலட்டுக்கு சீனாவின் செங்டு நகரிலிருந்து பாதை தெரியாத காரணத்தால், சீனாவின் சிறப்புவிமானம் மூலம் முஷாரப் அங்கிருந்து காட்மாண்டு செல்கிறார்.