ஆபாச படத்தில் சிக்கிய நடிகை போலீசில் வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷின் ஆபாச படத்தில் நடிக்க வில்லை என்று பிரபல நடிகை போலீசாரிடம் வாக்குமூலம்கொடுத்துள்ளார்.
பிரகாஷ் எடுத்த ஆபாசப்படங்களில் பல டிவி நடிகைகளும், மார்க்கெட் இழந்த சினிமா நடிகைகளும் நடித்துள்ளவிவரங்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணிநடிகையாக இருந்து தற்போது வாய்ப்பிழந்து வீட்டில் இருக்கும் ஒரு நான்கெழுத்து கவர்ச்சி நடிகையிடம் போலீசார்விசாரணை நடத்தினர்.
அந்த நடிகை போலீசாரிடம் கூறியதாவது:
டாக்டரை எனக்கு ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். சில நாட்கள் கழித்து என்னை சந்தித்த டாக்டர் ஒருவிளம்பரப்படம் எடுக்க மாடலாக நடிப்பீர்களா என்று கேட்டார்.
நான் கேட்ட பணத்தையும் தர முன் வந்தார். நானும் சரியென்று அவர் அழைத்த இடத்துக்குப் போனேன். ஷாம்பூவிளம்பரம் என்று கூறிய டாக்டர் என்னை குளிப்பது போல் படம் எடுக்க வேண்டும் என்று கூறி அதற்குரியஉடைகளை கொடுத்தார்.
உடைகள் கவர்ச்சியாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, சிறிது கவர்ச்சி தேவைப்படுகிறது என்று கூறி பலகோணங்களில் படம் எடுத்தார்.
ஆனால் நான் குளிப்பது போல் எடுத்த படத்தை மற்ற பெண்களின் ஆபாசப்படங்களுடன் இணைத்துஇன்டர்நெட்டில் அவர் வெளியிட்டுள்ளார் என்பது தற்போது தான் தெரிகிறது. நான் எந்த ஆபாசப் படங்களிலும்நடிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications