கர்நாடக எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக போட்டி
பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கனகபுரா நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கர்நாடக மாநிலஅதிமுக துணைச் செயலாளர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கனகபுரா நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகமாநில அதிமுக துணைச் செயலாளர் விக்கிரமாதித்தன் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கனகபுரா இடைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன். அனுமதி கிடைக்கும்என்ற நம்பிக்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன்.
ஜெயலலிதாவிடம் தொகுதி நிலவரங்களை கூற இன்று சென்னை செல்கிறேன். இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின்முடிவே இறுதியான முடிவு.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய மாநிலச் செயலாளர் புகழேந்தியின் சரியில்லாதஅணுகுமுறையே காரணம். அவரது தலைமையை பெரும்பாலானவர்கள் ஏற்க மறுத்ததும் ஒரு காரணம்.
கர்நாடகத்தில் அதிமுகவை பலப்படுத்தவும், வலுவான கட்சியாக மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கும் இந்தநாடாளுமன்ற இடைத் தேர்தல் ஒரு வாய்ப்பு என்று விக்கிரமாதித்தன் கூறியுள்ளார்.