உ.பி. தேர்தலில் சுவாமி கட்சி போட்டி
சென்னை:
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஜனதா கட்சி 54 இடங்களில் போட்டியிடப் போகிறது என்று அக்கட்சியின்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ராஷ்டிரவாதி ஏக்தா மோர்ச்சா என்ற கட்சியுடன் கூட்டணிஅமைத்துக் கொண்டு நாங்கள் போட்டியிடவுள்ளோம்.
மொத்தம் 54 வேட்பாளர்கள் எங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடவுள்ளனர்.
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முக்கிய மாற்றாக ராஷ்டிரவாதிஏக்தா மோர்ச்சா திகழும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா நாடாளுமன்றத் தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பாக பி.ஜி. தேவ கவுடாஎன்பவர் போட்டியிடுகிறார். இங்குதான் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடாவும் போட்டியிடுகிறார்.
தென் தமிழகத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது எங்கள் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அதேபோல் விரைவில் கர்நாடகத்திலும் எங்கள் கட்சியை வளர்ப்போம் என்றார் சுவாமி.
உ.பியில் நடிகை ஹேமமாலினி பாஜவுக்கு பிரச்சாரம்:
இதற்கிடையே உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகபிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.
இன்று சென்னையில் அவர் நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
தான் பாஜகவில் இல்லாதபோதும், அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் அதற்குஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் ஹேமமாலினி கூறினார்.