இலங்கை: நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு நார்வே முயற்சி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான அனைத்து முயற்சிகளையும் நார்வே தூதுக்குழுவினர் எடுத்துவருகின்றனர்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நார்வேயில் இருந்துவந்த தூதுக்குழு முயன்று வருகிறது. விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் சமர்ப்பித்தது.

இப்போது இலங்கை அரசு, எதிர்க்கட்சிகளுடம் ஆலோசனை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நார்வேதூதுக்குழு கேட்டு வந்தது. இதற்கிடையில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் கோரிக்கையை ஏற்று அவர்கள்ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பொருளாதாரத் தடையை நீக்கியது.

இதற்கிடையே இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் வரும் பிப்ரவரி 24ம் தேதி வரை போர் நிறுத்தத்தைநீட்டித்தன. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு முன் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்குமாறு இலங்கைஅரசுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர்.

புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஆதரவாக நேற்று பிரதமர் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பேசினார்.மேலும் நிரந்தர போர்நிறுத்தத்தை கடைபிடிப்பது பற்றியும் கருத்து கூறியுள்ளார்.

இதற்கிடையில் இலங்கை அரசின் கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு நார்வே தூதுவர் எரிக் சோல்ஹைம் நேற்றுலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்து 3 மணி நேரம்பேச்சுவார்த்தை நடத்தினார்.

நிரந்தர போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தை விரைவில் நார்வே தூதுக்குழுவினர் தயாரிப்பர் என்று தெரிகிறது.

நார்வே தூதுக்குழுவின் தலைவரான விடார் ஹெல்கெசன் விரைவில் பாலசிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவார்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு ஹெல்கெசன் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்நிலையில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+