வாக்காளர் பட்டியல் முறைகேடு: சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின்உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் பி.ஆர். சம்பத் மாற்றப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பில் முறைகேடு நடந்துள்ளதால் அந்த 2தொகுதிகளிலும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இந்த 2 தொகுதிகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் கமிஷன்தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி வாணியம்பாடி தொகுதியில் முறைகேடுக்கு காரணமான 2 அதிகாரிகளை அரசு சஸ்பெண்டு செய்ததோடுவாணியம்பாடி தாசில்தாரையும் பணி மாற்றம் செய்துள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் முறைகேடு நடந்ததற்கு முக்கியக் காரணமான சென்னை மாநகராட்சி கமிஷனர்சம்பத்தை மாற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சம்பத் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழக வருவாய்த் துறை துணைஆணையரான ஜி.என். ராமநாதன் சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ராமநாதன் முன்பு கிளர்க்காக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத் எங்கு மாற்றப்படுவார் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தமிழக அரசுகூறியுள்ளது.












Click it and Unblock the Notifications