காலி பானைகளை சுற்றி கும்மியடித்து பெண்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

உசிலம்பட்டி:

பல மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் கிராம மக்கள் காலி பானைகளை வைத்து கும்மி அடித்துபோராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி அருகே உள்ளது பண்ணைப்பட்டி கிராமம். இங்கு 3000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்தசில மாதங்களுக்கு முன் இங்கிருந்த இரு போரிங் பம்புகளிலும் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. நிலத்தடி நீர்வற்றிப் போனதால் இந்த பம்புகளில் தண்ணீரே வரவில்லை.

இதையடுத்து அருகாமை கிராமங்களில் உள்ள கிணறுகளில் இருந்து நீரை எடுத்து உபயோகித்து வந்தனர் இந்தகிராம மக்கள். ஆனால், கடந்த வாரம் இந்த மக்கள் நீர் எடுக்க அண்டை கிராமத்து கிணறு உரிமையாளர்கள் தடைவிதித்துவிட்டனர்.

இதனால் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பண்ணைப்பட்டி கிராம மக்கள் தவித்து வருகினறனர். இது குறித்துஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து இந்த கிராமத்தைச் சேர்ந்த 3000 பெண்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு காலிப்பானைகளுடன் வந்தனர். அந்தப் பானைகளை சுற்றிச்சுற்றி வந்து கும்மியடித்தும் அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள ஆண்டிப்பட்டியில் தான் முதல்வராகப் போகும் ஜெயலலிதா போட்டியிடுகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+