அரசு ஊழியர் போராட்டம்: அரசுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
வரும் பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி போராட்டத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் எனதமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
12 கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தக்கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டு அரசால் திடீரென திரும்பப்பெறப்பட்ட சலுகைகள் தான.
எனவே அவற்றைத் திரும்பப் தந்து ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என அதில்ராமதாஸ் கூறியுள்ளார்.
பன்னீர் வேண்டுகோள்:
இந் நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என ஊழியர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரசு ஊழியர்களின் சலுகைகள் தாற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன. நிதி நிலை சரியான பிறகு இந்த சலுகைகள் திரும்ப வழங்கப்படும். வரும் 7ம் தேதி டெல்லியில்நடக்கும் காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் சங்கர் கலந்துகொள்வார் என்றார்.
ஏற்கனவே, இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் அரசு அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். ஆனால், இதுதோல்வியடைந்தது. மீண்டும் இரு தினங்களில் பேச்சு நடக்கலாம் என்று தெரிகிறது.