ஜெயலலிதாவைத் தோற்கடியுங்கள்: ஆண்டிப்பட்டியில் வைகோ பேச்சு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவைத் தோற்கடிக்குமாறு அத் தொகுதி மக்களிடம் மதிமுக தலைவர் வைகோகோரிக்கை விடுத்தார்.
வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டியில் மதிமுக கட்சி அலுவகத்தைத் திறந்து வைத்து வைகோபேசியதாவது:
ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று நீதிமன்றம் விடுவித்தாலும் மக்கள் மன்றத்தில் நின்ற சொல்கின்ே, 5ஆண்டு காலம் ஜெயலலிதா ஊழல் செய்யவில்லையா?
தமிழக அமைச்சர் குடியரசு தின விழாவில் கூட கலந்து கொள்ளாமல் மரபுகளைப் புறக்கணித்துவிட்டு இரவுநேரங்களில் கூட ஆண்டிப்பட்டியை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் பணம் அள்ளி வீசிவருகின்றனர். மக்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை இத் தேர்தல் நிரூபிக்க வேண்டும்.
பஸ், மின்சாரம், தண்ணீர் கட்டணத்தை உயர்த்திவிட்டு இப்போது எந்த முகத்துடன் ஓட்டு கேட்டு வந்துள்ளார்கள்என்று தெரியவில்லை. இது ஜனநாயக மோசடி.
எங்கள் கட்சிக்கு சட்டசபையில் எம்.எல்.ஏவே கிடையாது. ஆனால், 3 எம்.பிக்களை வைத்துக் கொண்டு சேதுசமுத்திரத் திட்டத்தை வாங்கித் தந்தோம். திமுகவுக்கு சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எதிர்க் கட்சித்தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பை கருணாநிதிக்கு மக்கள் கொடுத்தார்கள்.
ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்காமல் மக்களை ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. இதனால் மாற்று சக்தி வேண்டும்என மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த சக்தியாக மதிமுக உருவெடுக்கும். எங்கள் கட்சியில் காலில்விழும் கலாச்சாரம், கட்-அவுட் கலாச்சாரத்துக்கு இடம் கிடையாது.
ஜெயலலிதா வருகிறார் என்பதற்காக பள்ளிக் குழந்தைகள் கையில் அதிமுக கொடிகளைக் கொடுத்து உச்சிவெயிலில் ரோட்டில் வரிசையில் நிற்க வைத்து இருந்தனர் அதிமுகவினர். இந்தக் குழந்தைகள் என்ன அதிமுகஉறுப்பினர்களா? இதைப் பற்றி எல்லாம் ஜெயலலிதாவுக்கு எந்தக் கவலையும் கிடையாது.
ஆண்டிப்பட்டியில் ஆயில் பெயிண்டில் தான் அதிமுகவினர் விளம்பரங்களை வரைந்திருக்கின்றனர். இதற்கு மட்டும்ரூ. 10 கோடி செலவு செய்துள்ளனர்.
தேர்தலுக்குப் பின் அரிசி விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா. அரிசி விலை உயர்வைத் தடுக்கவிரும்பினால் ஜெயலலிதாவைத் தோற்கடியுங்கள்.
இவ்வாறு வைகோ பேசினார். அவரது பேச்சுக்கு அங்கு நல்ல வரவேற்பும் இருந்தது.