தமிழகத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை:
வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் 3வது நாளாக மிகபலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்கள்நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்துக்கும் இலங்கைக்கு இடையில் உருவான இந்த காற்றழுத்தத் தாழ்வுமணடலம் தென்மேற்காக நகர்ந்துகன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளது.
இதனால் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மன்னார்குடி, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் மிக பலத்த மழைபெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் 2 நாட்களுக்கு பலத்த புயல் காற்றுடன் மழை பெய்யும் வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்காகக் காத்திருந்த சம்பா நெல் நீரில்மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில்மழைக்கு ஒரு வாலிபர் பலியாகியுள்ளார்.
தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறந்துவிடப்படுவதுநிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications