தினமணி நிருபர் தற்கொலை: ஆசிரியர் கொடுமையே காரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தினமணி பத்திரிக்கை நிருபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தினமணி நாளிதழில் நிருபராக பணியாற்றியவர் ரா.குமார் (27). கடந்த 4 மாதங்களுககு முன்பு தான் தினமணியில்நிருபராக சேர்ந்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நங்கநல்லூரில் வசித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர், தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தினமணி பத்திரிக்கை ஆசிரியர் இராம.சம்பந்தம் செய்த கொடுமை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக, அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications