For Daily Alerts
Just In
ஜெ. பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ம் தேதி சென்னை மருத்துவமனையில் பிறக்கும்குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்க மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடுசெய்துள்ளார்.
ராயபுரம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 24ம் தேதி பிறக்கும் குழந்தைகள் இந்தபரிசுகளைப் பெறும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் ஆவர்.
ராயபுரம், ஜெயக்குமாரின் சட்டசபைத் தொகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க மோதிரம் தவிர ராயபுரம் தெரசா நிர்மலா சிசுபவனில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஒருவாரத்திற்குத் தேவையான பால் பவுடர், உணவுப் பொருட்கள், பிரியாணி உள்ளிட்டவற்றையும் அமைச்சர்ஜெயக்குமார் தருகிறார்.
இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ராயபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Story first published: Thursday, February 21, 2002, 5:30 [IST]