அதிமுக-திமுக மோதல்: வடுகப்பட்டியில் போலீஸ் தடியடி
ஆண்டிப்பட்டி:
வடுகப்பட்டியில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அவர்களைக்கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
கவிஞர் வைரமுத்துவின் சொந்த ஊர் வடுகப்பட்டி. இந்தத் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு கிட்டத்தட்டசரிசமமான ஆதரவு உள்ளது.
இங்கு வாக்குப் பதிவு மிக வேகமாக நடந்து வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கி அரை மணி நேரத்துக்குள்ளேயேசுமார் 9 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
இங்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவர் மீதுஒருவர் புகார் கூறிக் கொண்டு அடிதடியில் இறங்கினர். அவர்களைக் கலைக்க போலீசார் எடுத்த முயற்சிகள்பலனளிக்காததால் தடியடி நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். ஆனால், அதிமுகவினரை விட்டுவிட்டுதிமுகவினரை மட்டுமே போலீசார் விரட்டி அடித்ததாக திமுக தொண்டர்கள் புகார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications