சட்டசபைக்கு வந்தால் கருணாநிதிக்கு முழு பாதுகாப்பு: காளிமுத்து உறுதிமொழி
சென்னை:
கருணாநிதி சட்டமன்றத்திற்கு வர வேண்டும், அவ்வாறு வந்தால் அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றுசட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
இன்று காலை சபாநாயகர் அறையில் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட பின் சபாநாயகர் காளிமுத்துநிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி கூடும். 11ம் தேதி வரை நடக்கும்.
சட்டமன்றத்திற்கு கருணாநிதி வந்து விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டும். இது குறித்து அவருக்கு பல முறைநினைவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் சட்டமன்றத்திற்கு வந்தால் முறையான முழு பாதுகாப்புஅளிக்கப்படும்.
அவர் சட்டமன்றத்திற்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
திருநாவுக்கரசின் எம்.ஜி.ஆர். அதிமுக தற்போது பா.ஜ.கவில் சேர்ந்து விட்டதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ. அரசன் தனக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமரும் இடத்தில் இடம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் கடிதம் வாங்கி சமர்ப்பிக்கும் படி கூறியுள்ளேன். அவர் கடிதத்தை கொடுத்தால் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜ்யசபா எம்.பிக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிவடைகிறது. 17ம் தேதிவேட்பு மனுத்தாக்கல் பரிசீலனை செய்யப்படும். 18ம் தேதி வேட்பு மனுத்தாக்கலை வாபஸ் பெறலாம். 27ம் தேதிதேர்தல் நடத்தப்படும் என்று காளிமுத்து கூறினார்.












Click it and Unblock the Notifications