போலி வாக்காளர்களை நீக்கும் பணி தொடங்கியது
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் வாக்காளர்கள் சரி பார்க்கும் பணி இன்று தொடங்கியது.
பிப்ரவரி மாதம் 21ம் தேதி சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறுவதாகஇருந்தது. ஆனால் இரு தொகுதிகளிலும் 15,000 மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுகபுகார் கூறியது. ஆண்டிப்பட்டியிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் 3 தொகுதிகளிலும் ஆய்வு நடத்தியது. இதில் ஆண்டிப்பட்டியில் முறைகேடுநடக்கவில்லை என்று கூறிவிட்டு மற்ற 2 தொகுதிகளிலும் போலியாக ஆயிரக்கணக்கான வாக்காளர்கள்நடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தது. இதையடுத்து தேர்தலை தள்ளி வைத்தது. ஆண்டிப்பட்டியில் தேர்தலைநடத்தியது.
இந்த இரு தொகுதிகளலும் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம்மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் இன்று வாக்காளர் சரிபார்க்கும் பணி தொடங்கியது. சென்னைசைதாப்பேட்டையில் வருவாய்துறை, மாநகராட்சியை சேர்ந்த 630 ஊழியர்கள் இந்த வாக்காளர் பட்டியலைசரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வரும் 8ம் தேதி வரை இந்தப் பணியில் ஈடுபடுவர். தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி இப் பணிநடைபெறும். வீடு வீடாக சென்று பட்டியலில் இருப்பவர்கள், இருக்கிறார்களா என்று இவர்கள் விசாரிப்பர்.போலியாக யாராவது சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களது பெயர் நீக்கப்படும்.
இதே போல் வாணியம்பாடியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications