அயோத்தியில் பதற்றம்: தமிழக கோவில்களில் வெடிகுண்டு சோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அயோத்தியில் தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கியமானகோவில்களில் வெடிகுண்டு சோதனை இன்று (வெள்ளிக்கிழமை) நடந்து வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.

மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயின் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமான வெடிகுண்டு சோதனையும்நடத்தப்பட்டது.

கோயம்புத்தூரில் உள்ள முக்கியமான கோவில்களுக்கும் மசூதிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கமன்னார் திருக்கோவிலிலும் இன்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

இவை தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட முக்கிய நகரங்களில் உள்ள கோவில்களிலும் வெடிகுண்டுசோதனைகள் நடத்தப்பட்டன.

முக்கியமாகக் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதோடு, அங்கு பலத்தபாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை ரயிலில் வெடிகுண்டு புரளி:

இதற்கிடையே சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.

இதையடுத்து வழியிலேயே அந்த ரயில் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசாரால்சோதனையிடப்பட்டது.

ஆனால் அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து, அந்தத் தகவல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

இந்தப் புரளியால் சென்னை-ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில் இன்று காலை சுமார் 4 மணி நேரத்திற்கு ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+