திமுகவினர் வீடுகளில் ரெய்ட் நடத்தியது சரியே: சுவாமி சொல்கிறார்
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சரியானநடவடிக்கைதான் என்று ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தியிருப்பதில் தவறேதும் இல்லை.
வெறுமனே அனுதாபத்திற்காக வேண்டுமானால் இந்தச் சோதனையை எதிர்த்து அறிக்கை விடலாம். ஆனால் நான்அவ்வாறு கூற விரும்பவில்லை.
முன்னாள் திமுக அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் என்பது உண்மைதான். அந்தமான்,மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் எல்லாம் அவர்களுக்குச் சொத்துக்கள் உள்ளன.
இப்படி சோதனைகள் நடத்தினால்தானே உண்மைகள் அனைத்தும் வெளிவரும். கருணாநிதியும்இவற்றையெல்லாம் எதிர்ப்பது போலவே தெரியவில்லை. வீட்டில்தானே அவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்என்றார் சுவாமி.
மதுரை அருகே அல்-உம்மா கைதிகள் தப்பிய சம்பவம் குறித்து கேட்டபோது, போலீசாரின் அலட்சியம்காரணமாகவே அந்தக் கைதிகள் தப்பியுள்ளனர் என்று சுவாமி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications