சென்னையில் நடு ரோட்டில் கிடந்த பைப் வெடிகுண்டுகள்
சென்னை:
சென்னை பாரிமுனைப் பகுதியில் 10 பைப் வெடிகுண்டுகளை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்கண்டுபிடித்தனர்.
பாரிமுனைப் பகுதியில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு நடு ரோட்டில் அநாதையாகஒரு பை கிடந்ததைப் பார்த்தனர்.
உடனே அதை எச்சரிக்கையுடன் எடுத்துப் பார்த்த போலீசார், அந்தப் பையில் 10 பைப் வெடிகுண்டுகள் இருந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் அந்த பைப் வெடிகுண்டுகளைப் புலனாய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்தவெடிகுண்டுகளை யார் வைத்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் ஒரு வாரத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்த பைப்வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மக்கள் நடமாட்டம் மிகுந்து இருக்கும் ரயில் நிலையம், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகியஇடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications