புஷ்சுக்கு வாஜ்பாய் அவசர கடிதம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைவிரைந்து எடுக்கக் கோரி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு பிரதமர் வாஜ்பாய் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்புத்துறை செயலாளரானயோகேந்திர நரெய்ன் இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் கடிதத்தைத் தான் கொண்டு வந்து புஷ்சிடம் கொடுக்கவில்லை என்றும் நரெய்ன் தெளிவுபடுத்தினார்.
ஆளற்ற விமானங்கள் முதல் பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் பொருட்டுநரெய்ன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவும் ஏராளமான ஆயுதங்களை இந்தியாவுக்கு விரைவில் அளிக்கவுள்ளதாக நரெய்ன் கூறினார்.












Click it and Unblock the Notifications