For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை துறைமுகத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை துறைமுகத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தை மட்டுமல்லாமல் அங்கு வந்து சேரும் கப்பல்களையும் தீவிரவாதிகள் தகர்ப்பதற்குத்திட்டமிட்டிருப்பதாகக் கடந்த சில நாட்களாகவே உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ரோவர் கிராப்ட் படகுகளும் ஹெலிகாப்டர்களும் சென்னைநோக்கி வந்து கொண்டிருந்த கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தன.

இந்நிலையில் சென்னை துறைமுகத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இன்று மிரட்டல் வந்துள்ளது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்குள் நுழைபவர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும்அவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.

இதைத் தவிர கப்பலில் செல்லும் மற்றும் கப்பலிலிருந்து இறங்கி வரும் பயணிகளையும் போலீசார் தீவிரமாகச்சோதனை செய்து வருகின்றனர்.

துறைமுகப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள்

இதற்கிடையே சென்னை துறைமுகப் பகுதியில் சில நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் போலீசாரைக் கண்டதும்திடீரென்று தன் கையிலிருந்த ஒரு பையைக் கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

அந்தப் பையைக் கைப்பற்றிய போலீசார் அதைச் சோதனை செய்தபோது, அதில் 10 நாட்டு வெடிகுண்கள்இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்திற்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் நாட்டுவெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X