28ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.பார்ம் ஆகிய படிப்புகளில் மாணவர்கள்சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 28ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

தமிழகம் முழுவதும் 15 மருத்துவக் கல்லூரிகள், 12 பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 36 பார்மசி கல்லூரிகள்உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் விரைவில் மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக சென்னைமருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி உள்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள்வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10ம்தேதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 1,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக(என்.ஆர்.ஐ.) கூடுதலாக 150 இடங்களை இந்த ஆண்டு முதல் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவை அனைத்துமே"பேமெண்ட் சீட்"களாகும்.

இதே போல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள 50 இடங்கள்80ஆக அதிகரிக்கப்படும். இந்தக் கூடுதல் இடங்கள் "பேமெண்ட் சீட்" அடிப்படையில் ஒதுக்கப்படும்.

இதற்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெற்றது மருத்துவப் படிப்பில்சேர்வதற்காக 1,36,247 மாணவ-மாணவிகள் பிசிக்கல் சயின்சஸ் பாடத்தையும், 67,202 பேர் உயிரியல்பாடத்தையும் எழுதியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+