சென்னையில் 8 "மொபைல்" விபச்சாரிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மொபைல் போன், கார் சகிதம் விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறந்து வருகிறது. குறிப்பாக மொபைல் போன்கள், கார்கள் சகிதம்,போலீசாரின் பிடியில் சிக்காமல் விபச்சாரம் செய்து வருகிறார்கள். முன்பு மாதிரி பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையம்,தெரு முனைகளில் எல்லாம் விபச்சாரிகள் இப்போது நிற்பது கிடையாது.

சென்னையில் பெருகி வரும் விபசாரத்தைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில்போரூர் பகுதியை இதற்காக போலீசார் தேர்வு செய்தனர்.

இதையடுத்து போலீஸ் தரப்பில் ஒருவர் மூர்த்தி நகரைச் சேர்ந்த விபச்சார புரோக்கரை நாடினார். அவரிடம் தனக்குப்பெண் தேவை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த புரோக்கர் ஒரு மொபைல் நம்பரை அவரிடம் கொடுத்து,பொதுத் தொலைபேசியிலிருந்து இந்த நம்பருக்கு போன் செய்யுமாறு கூறினார்.

இதையடுத்து போலீஸ் நபர் அந்த நம்பருக்குப் போன் செய்தார். போன் செய்த சில நிமிடங்களில் ஒரு காரில் அந்தபுரோக்கர் வந்தார். காருக்குள் நான்கு பெண்கள் இருந்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் மறைந்திருந்த போலீசார் அந்தக் காரைச் சுற்றி வளைத்து புரோக்கரையும் அந்தநான்கு பெண்களையும் கார் டிரைவரையும் கைது செய்தனர்.

புரோக்கரிடம் விசாரணை நடத்தியதில், மூர்த்தி நகரிலேயே ஒரு பங்களாவில் இந்த விபச்சாரிகளைவைத்துள்ளதாகவும், போன் செய்தால் அந்த இடத்திற்கு காரில் கொண்டு வந்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த பங்களாவிலும் ரெய்ட் நடத்திய போலீசார் மேலும் நான்கு விபச்சாரிகளைக் போலீசார்கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விபச்சாரிகள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்பவர் தான் இவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். தற்போதுதலைமறைவாகி விட்ட அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+