4 இலங்கை தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 3 பெண்கள் உள்பட 4 தமிழ் அகதிகள் நேற்று (வியாழக்கிழமை) ராமேஸ்வரத்திற்கு வந்தனர்.
வியாழக்கிழமை காலை திரிகோணமலையைச் சேர்ந்த நாகேஸ்வரி, கண்டியைச் சேர்ந்த நிஜீமா, மன்னாரைச் சேர்ந்தமீனாட்சி மற்றும் தலைமன்னாரைச் சேர்ந்த அகிலன் ஆகியோர் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே உள்ளதனுஷ்கோடி வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் அமைதிப் பேச்சு மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்அதிகரித்துள்ள நிலையில் அகதிகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களை கடலோர காவல்படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணைநடத்திய போது, இலங்கையில் இப்போது அமைதி நிலவினாலும் கூட நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்என்பதற்காக இங்கு வந்ததாக தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து, ராமேஸ்வரம் வருவதற்காக படகோட்டிக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.24,000 கொடுத்ததாகவும்அவ்வகதிகள் தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பின் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.