திருட்டு முயற்சி தோல்வி: வீட்டுக்காரரை "லாக்-அப்" செய்த கொள்ளையன்
சென்னை:
சென்னையில் திருட வந்த திருடன் தனது முயற்சி பலிக்காததால், ஆத்திரத்தில் கையோடு கொண்டு வந்திருந்த ஒருபூட்டைக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு தப்பி விட்டான்.
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவர் தனது குடும்பத்துடன் புதன்கிழமைஇரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் ஜன்னல் பக்கமிருந்து "கர் கர்" என்று சப்தம் கேட்டதும் கிருஷ்ணன் விழித்து எழுந்து வந்துபார்த்தபோது, ஒரு திருடன் கஷ்டப்பட்டு ஜன்னல் கம்பியை ஆக்ஷா பிளேடால் "டர் டர்" என்று அறுத்துக்கொண்டிருந்தான்.
ஜன்னலை அறுத்துக் கொண்டிருந்த திருடன், கிருஷ்ணன் வந்து நிற்பதைப் பார்த்ததும் அதிர்ந்தான். ஆனால்சுதாரித்துக் கொண்டு "டேய் கதவைத் திற" என்று கத்தியுள்ளான்.
ஆனால் பயப்படாத கிருஷ்ணன் திருடனுடைய கண்ணெதிரிலேயே போனை எடுத்து போலீசுக்கு போன் செய்யத்தொடங்கினார். இதைப் பார்த்த திருடன் ஆத்திரமடைந்தான்.
ஜன்னலை அறுக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு தன்னிடமிருந்த ஒரு பூட்டை எடுத்து வீட்டின் வெளிப்புறக்கதவில் பூட்டி விட்டு கடுப்புடன் அங்கிருந்து ஓடி விட்டான்.
இதற்குள் கிருஷ்ணன் போன் செய்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வெளியே பூட்டப்பட்டிருந்த பூட்டைஉடைத்து கிருஷ்ணனை ரிலீஸ் செய்தனர்.












Click it and Unblock the Notifications