தமிழர்களை உலகறியச் செய்தவர்களே புலிகள் தான்: வைகோ

Subscribe to Oneindia Tamil

பாவூர்சத்திரம்:

விடுதலைப்புலிகள் தான் உலகில் தமிழர்களுக்கென புது முகவரி தேடிக் கொடுத்தனர் என்று மதிமுக பொதுச்செயலாளரான வைகோ கூறினார்.

மதிமுகவின் 9வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது.அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு சம்பவம் ஏற்பட்டு விட்டது என்பதற்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் நாம் கைகழுவி விடமுடியுமா?

கடந்த 50 ஆண்டுகளாக அறவழியில் போராடியும் தீர்வு கிடைக்காததால் தான் புலிகள் ஆயுதங்களைக் கையில்எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழர்கள் என்றால் யார் என்பது குறித்து உலகத்திற்கு தெரியப்படுத்தியவர்களே புலிகள் தான்.


கடந்த ஓராண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பப்பு ஆகியவை தான்அதிகரித்துள்ளன. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் தற்போது நிலவி வருகிறது. அனைத்துக்கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆட்சியைப் பற்றியும் அதிகாரத்தைப் பற்றியும் மட்டுமே அதிமுகவும் திமுகவும் கவலைப்படுகின்றன. நாட்டைப்பற்றியோ மக்களைப் பற்றியோ சிறிதும் அவர்கள் நினைக்கவில்லை.

இதனால் தான் மக்கள் கவனம் தற்போது மதிமுக மீது திரும்பியுள்ளது. அம்மக்களின் கண்ணீரை நாங்கள் தான்துடைக்கப் போகிறோம் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+