அச்சிறுப்பாக்கம்: கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த கும்பல்
அச்சிறுப்பாக்கம்:
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த ஒரு கும்பலைப்போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
அச்சிறுப்பாக்கத்தில் பெண்களே அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எலப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் ஏஜென்டுகளிடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றது.
ஆனால் அவர்களைப் போலீசார் விரட்டி அடித்தனர். மேலும் அவர்களில் மூன்று பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
பாப்பாநல்லூர் என்ற இடத்தில் அதிமுக மற்றும் மதிமுக தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது. அவர்களைபோலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இதற்கிடையே லாரியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்த நூற்றுக்கணக்கானவர்களை தடுத்து நிறுத்தி அவர்களைஅங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.












Click it and Unblock the Notifications