சைதை 31%, அச்சிறுப்பாக்கம் 24%, வாணியம்பாடி 21.5%
சென்னை:
தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
வாக்குப் பதிவு தொடங்கிய முதல் 4 மணி நேரத்தில் சராசரியாக 30 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி நிருபர்களிடம் கூறுகையில்,
சைதாப்பேட்டையில் பகல் 12 மணி வரை 31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அச்சிறுப்பாக்கத்தில் 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாணியம்பாடியில் வெறும் 21.5 சதவீத வாக்குகள்தான் பதிவாகியுள்ளன.
சைதாப்பேட்டையில் 26 வாக்காளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணுஎந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு 10 இடங்களில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவை சரிசெய்யப்பட்டுவிட்டன். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான இடங்களில் வாக்குப் பதிவு வீடியோ படம் எடுக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications