மக்களுக்கு பதுங்கு குழிகள்: ராணுவம் அமைக்கிறது
ஆர்.எஸ்.புரா (ஜம்மூ):
பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக இந்திய எல்லைப் பகுதி மக்களுக்கு ராணுவம் பதுங்குக்குழிகளை அமைத்துத் தர ஆரம்பித்துள்ளது.
வெறும் குழிகளாக இல்லாமல் பல பேர் தங்கியிருக்க வசதியாக சிறிய அண்டர் கிரவுண்ட் வீடுகளாகவே இவைஅமைக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.புரா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பீகா மற்றும்கொரோதன் கிராமங்களில் இதுவரை 17 பதுங்கு குழி வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.
ஆபரேசன் மர்மாலாடே என்ற பெயரில் எல்லைப் பகுதி கிராமங்களைப் பாதுகாக்கும் பயிற்சியில ராணுவம்ஈடுபட்டுள்ளது. இது போருக்கு முந்தைய பயிற்சியாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 15 பதுங்குக் குழி வீடுகள் கட்டப்படவுள்ளன. ராணுவ வீரர்கள், இளைஞர்கள்இணைந்து இந்த குழிகளை அமைத்து வருகின்றனர்.
எல்லைப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்குராணுவம் குடியேற்றிவிட்டது.
ஆனால், இளைஞர்கள் தொடர்ந்து எல்லையிலேயே உள்ளனர். அவர்கள் ராணுவத்துக்கு பல வழிகளில் உதவிவருகின்றனர். இந்தப் பகுதியை நன்றாக அறிந்தவர்கள் என்பதால் போர்க் காலத்தில் இவர்களின் உதவிராணுவத்துக்கு மிக அவசியாகத் தேவைப்படும்.
இந்த பதுங்கு குழிகள் அமைக்கும் பணியை முறியடிக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் மிக அதிக சக்தி வாய்ந்தகுண்டுகளால் தொடர்ந்து சுட்டு வருகின்றனர். இதற்கு பதிலடித் தாக்குதல் நடத்தியவண்ணம் பதுங்கு குழிகள்அமைக்கும் வேலையையும் ராணுவம் செய்து வருகிறது.
இந்தப் பகுதியில் எல்லையில் மட்டும் 407 கிராமங்கள் உள்ளன. இந்த எல்லா கிராமங்களிலும் பதுங்குக் குழிகளைஅமைத்துத் தந்து வரும் ராணுவம் எதிரியின் துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படிஎன்பது குறித்தும் மக்களுக்கு பயிற்சியளித்து வருகிறது.
பெர்னாண்டஸ் ஆலோசனை:
இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனங்களின்தலைவர்களுடன் பெர்னாண்டஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவஉயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
பெங்களூரில் இக் கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தியாவுக்குள் பதற்றத்தை அதிகரிப்பதற்காகத் தான அணு குண்டு வீசுவோம் என பாகிஸ்தான் மிரட்டுகிறது.இதன்மூலம் இந்தியாவுக்கு வரும் அன்னிய முதலீட்டையும் தடை செய்ய திட்டமிட்டுகிறார்கள் எல்லைக்குஅப்பால் இருந்து தீவிரவாதிகள் வருவது குறையவில்லை என்றார்.
அணுகுண்டு போடுவோம் என்பது பெரிய ஜோக். அணுகுண்டு பற்றி பேசுபவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்றுமுஷாரபே இப்போது சொல்லிவிட்டார். அவருக்காகவாவது நாம் பொறுப்பானவ்களாக இருப்போமே!.எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகள் வருவது குறையவில்லை என்றார் பெர்னாண்டஸ்.
லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதில் ஒருவன் இந்த அமைப்பின் துணை கமாண்டர் ஆவான்.
ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் சுட்டனர்.பதிலுக்கு ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தி இவர்களைக் கொன்றனர்.
அத்வானியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு:
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைஇந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று சந்திததுப பேசினார். எல்லை நிலவரம் குறித்தும்அமெரிக்க அமைச்சர்கள் இந்தியாவுடன் பேச்சு நடத்த வருவது குறித்தும் அவர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications