கிளைடர் விமானம் விழுந்து என்.சி.சி. மாணவி, பயிற்சியாளர் பலி
சென்னை:
சென்னை தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில் கிளைடர் விமானம் விபத்துக்குள்ளாகி என்.சி.சி.மாணவியும் பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.
இங்கு 7 மாணவர்களும் 4 மாணவிகளும் கிளைடர் விமானங்கள் இயக்கவும், சிறிய ரக விமானங்களை ஓட்டவும்பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்திய விமானப் படை இந்த பயிற்சியை தந்து வருகிறது.
வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் என்.சி.சி. மாணவி சத்யாவும் (18) இந்த பயிற்சியில்ஈடுபட்டிருந்தார். நேற்று அவருக்கு விமானப் படையைச் சேர்ந்த குரூப் கமாண்டர் தவேஜா (48) இவருக்குகிளைடர் இயக்க பயிற்சி தர அழைத்துச் சென்றார்.
முதலில் ஒரு சுற்று வானில் வட்டமடித்துவிட்டு இந்த கிளைடர் விமானம் தரையிறங்கியது. பின்னர் இரண்டாவதுசுற்றுக்குக் கிளப்பியது. அப்போது ரன்வேயில் இருந்து கிளம்பி சுமார் 400 அடி உயரத்தை எட்டிய நிலையில்கிளைடர் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் இருவரும் மிக பலத்த காயமடைந்தனர். இருவரையும் தாம்பரம் விமானப் படை மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால், இருவரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications