பதவிப் பறிப்பு நோட்டீஸ் வந்தது: ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பதவிப் பறிப்பு குறித்து மு.க. ஸ்டாலினுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று மாலை அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில் மேயராக தொடரப் போகிறீர்களா? எம்.எல்.ஏவாக இருக்கப்போகிறீர்களா என்பதை 5 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இல்லாவிட்டால்அரசே பதவியைப் பறிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினைக் குறி வைத்து ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதற்குஆளுநர் ராம்மோகன் ராவின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதையடுத்து இந்தச் சட்டம் அரசு கெசட்டில் (அரசுஆணை) வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்குஸ்டாலின் உள்ளானார். அவர் இம் மாதம் 18ம் தேதிக்குள் இதற்கான முடிவெடுக்க வேண்டும். இதற்கு இன்னும் 5நாட்கள் தான் உள்ளன.

ஆனால், ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. முதலில் எம்.எல்.ஏ. பதவியைஉதறிவிட்டு மேயராக தொடர்ந்து அரசுடன் நேரடியாக மோதுவது என்று ஸ்டாலின் முடிவெடுத்தார்.

இதன் பின்னர் எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யாமல் சும்மா இருப்பது. அரசு தனது பதவியைப் பறித்த பின்போராட்டம் நடத்துவது என்ற முடிவுக்கு வந்தார்.

இந் நிலையில் 18ம் தேதியன்று நீதிமன்றத்தில் தடை வாங்கி பதவிப் பறிப்பை நிறுத்தி வைத்து சட்டப்படிபோராடுமாறு அவருக்கு யோசனை தரப்பட்டுள்ளது.

அரசுச் செயலாளரிடம் இருந்து ஸ்டாலினுக்கு இரு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேயர் என்ற முறையில்மாநகராட்சிக்கும், எம்.எல்.ஏ. என்ற முறையில் கட்சியின் அலுவலகத்துக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+