For Daily Alerts
Just In
பஞ்சாபில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்
தர்மபுரி:
பஞ்சாபில் வெடிகுண்டுகளை நீக்கும்போது மின்சாரம் தாக்கி தமிழக ராணுவ வீரர் இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் குந்தப்பள்ளியைச் சேர்ந்த செல்வம், மல்லிகா தம்பதியின் மகன் சம்பத் குமார். ராணுவ வீரரானஇவர் பஞ்சாப் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
கடந்த 10ம் தேதி பஞ்சாப் எல்லைப் பகுதியில் வெடிகுண்டுகளை நீக்கிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்தஉயர் மின்சார கம்பி இவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து இவர் உயிரிழந்தார்.
இதையடுத்து இவரது உடல் தர்மபுரிக்குக் கொண்டு வரப்பட்டது. இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்,எஸ்.பி மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது தந்தை செல்வமும் முன்னாள் ராணுவ வீரர் தான்என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, June 14, 2002, 5:30 [IST]